தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
ADDED : மார் 07, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியும், சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனருமான சுதாகர், 47, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
தற்போது, ஐ.ஜி., ரேங்கில் உள்ள அவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை தலைமை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இப்பதவியில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.