ADDED : ஜூலை 03, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரவீன் பி நாயர், மத்திய கல்வி அமைச்சரின் தனிச்செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக அரசின் மின்னாளுமை இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரவீன் பி நாயர். இவர் தற்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின், தனிச்செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இப்பதவியில் ஐந்தாண்டுகள் இருப்பார் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.