sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து

/

கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து

கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து

கோயில் சொத்து பராமரிப்பு: சி.பி.ஐ., விசாரணை ரத்து

7


ADDED : ஏப் 07, 2024 01:44 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 01:44 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவில் சொத்துக்கள் பராமரிப்பு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நிலத்தை, பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை மறுத்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, குறிப்பிட்ட அந்த நிலம், நந்தம்பாக்கத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சொந்தமானதா என்ற கேள்வி எழுந்தது.

நிலம் தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ''கோவில் நிலம் தொடர்பான அசல் ஆவணங்களை, அதிகாரிகளால் தாக்கல் செய்ய முடியவில்லை. கோவில் சொத்து குறித்த பதிவேட்டையும், சொத்தையும் பராமரிப்பதில், அறநிலையத்துறை சட்டத்தை அதிகாரிகள் பின்பற்றவில்லை.

எனவே, இந்தக் கோவில் சொத்துக்கள் குறித்தும், அதை முறையாக பராமரிக்காமல் தவறு செய்த அதிகாரிகள் குறித்தும், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, கோதண்டராமர் கோவில் நிர்வாக அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

நிர்வாக அதிகாரி சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் சொத்துக்களை கவனமுடன் அதிகாரிகள் பாதுகாப்பர்,'' என்றார்.

இதையடுத்து, ''தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், கோவில் சொத்துக்களை கவனித்துக் கொள்வதாக உத்தரவாதம் அளித்ததாலும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுகிறது,'' என, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us