sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு காபி துாள்

/

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு காபி துாள்

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு காபி துாள்

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு காபி துாள்


ADDED : செப் 15, 2024 12:29 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:

தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில், 2019ல், 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில், 249; 248; 131; 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தாண்டில் இதுவரை, 72 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

அதேபோல, சென்னையில், 2019ம் ஆண்டில், 55 வழக்குகள்; அடுத்தடுத்த ஆண்டுகளில், 49; 27; 26; 18 வழக்குகள் பதிவு செய்த நிலையில், இந்தாண்டில் இதுவரை நான்கு வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

எங்கள் இயக்கம் சார்பில், கல் குவாரி ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், கரூரில் போடப்படாத ரோட்டிற்கு பணம் பெற்றதில் ஊழல் என, 30க்கும் மேற்பட்ட புகார்களை ஆதாரத்துடன் அளித்துள்ளோம். லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த புகார்களை விசாரிக்காமல் உள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக எவ்வித வழக்கும் பதியாமல் துாங்கும், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரை, தட்டி எழுப்பும் வகையில், இன்று முதல் காபி துாள் அனுப்பும் போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us