sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி

/

கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி

கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி

கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி


ADDED : ஜூன் 14, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிய பி.டெக்., பட்டதாரி சுருண்டு விழுந்து இறந்தார்.

புதுச்சேரி, பாக்கமுடையான்பேட்டை, முல்லை நகரை சேர்ந்தவர் ஹரிகரன் மகன் கிேஷார், 21; பி.டெக்., பட்டதாரியான இவர், உயர்கல்வி படிக்க வெளிநாட்டில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், லாஸ்பேட்டை ஏர்போர்ட் விளையாட்டு மைதானத்தில், சக நண்பர்களுடன் நேற்று காலை 9:00 மணியளவில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, கிேஷார் திடீரென சுருண்டு கீழே விழந்தார். மூச்சு பேச்சின்றி கிடந்த அவரை, சக நண்பர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், கிேஷாருக்கு 2 வயதில் இருந்து இதயத்தில் பிரச்னை உள்ளது. அதற்காக அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், அவருக்கு அடிக்கடி மயக்கம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us