ADDED : செப் 06, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''வழக்குகள் தொடர்பாக, எஸ்.ஐ., நிலைக்கும் குறைவில்லாத விசாரணை அதிகாரிகள் தான், அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டும் என, ஏற்கனவே டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது பின்பற்றப்படுவது இல்லை என, தெரியவந்துள்ளது. இதற்கு நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இனி வழக்குகள் தொடர்பாக, சி.டி.ஆர்., எனப்படும் கால் ரெக்கார்டர் பைல்ஸ், வாக்குமூலம் என தேவையான ஆவணங்களுடன், எஸ்.ஐ., நிலைக்கும் குறைவில்லாத விசாரணை அதிகாரிகள் தான் ஆஜராக வேண்டும். இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
- சங்கர் ஜிவால், டி.ஜி.பி.,