sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை பெண் உட்பட மூவர் விபத்தில் உயிரிழப்பு

/

சென்னை பெண் உட்பட மூவர் விபத்தில் உயிரிழப்பு

சென்னை பெண் உட்பட மூவர் விபத்தில் உயிரிழப்பு

சென்னை பெண் உட்பட மூவர் விபத்தில் உயிரிழப்பு


ADDED : ஜூன் 17, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: சென்னை, ஆவடியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி ஹேமலதா, 60, அவர்கள் மகன் மாதவன், 29, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜன், 35, அவரது மனைவி பூங்கொடி, 30, மகன்கள் வெற்றி செல்வன், 7, மோகிதன், 5, உள்ளிட்ட 10 பேர் திருச்செந்துார், குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு 'எர்டிகா' காரில் திரும்பினர். தென்காசி -- ராஜபாளையம் ரோட்டில் புன்னையாபுரம் அருகே சென்ற போது எதிரே தவிடு ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது. இதில், அனைவரும் படுகாயமடைந்தனர். சொக்கம்பட்டி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹேமலதா பலியானார். லாரி டிரைவர் விளாத்திகுளம் குருசாமியை போலீசார் கைது செய்தனர்.

l விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் பாஸ்கரன், 33; ராணுவ வீரர். விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தார். விருதுநகர் சேத்துாரில் வங்கியில் பணிபுரியும் துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையை சேர்ந்த நண்பர் கிருஷ்ணராஜ், 32, மற்றும் மைத்துனர் மாரிமுத்து ஆகியோருடன் பாஸ்கரன் காரில் குற்றாலம் சென்று திரும்பினர்.

அதிகாலை, 3:30 மணியளவில் கார் புளியங்குடி தனியார் கல்லுாரி அருகில் ரோட்டோர தென்னை மரத்தில் மோதியது. இதில், ராணுவ வீரர் பாஸ்கரன் மற்றும் வங்கிப்பணியாளர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாரிமுத்து காயமுற்றார். புளியங்குடி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us