ககன்தீப்சிங் பேடி, சுப்ரியா சாஹு உட்பட 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
ககன்தீப்சிங் பேடி, சுப்ரியா சாஹு உட்பட 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
ADDED : ஜூலை 02, 2024 03:24 AM
சென்னை : ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை செயலர் உட்பட, 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி
மணிவாசன் செயலர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலர், நீர்வளத்துறை
சந்திரமோகன் செயலர், பொதுப்பணித்துறை செயலர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை
மங்கட்ராம் சர்மா செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர், பொதுப்பணித்துறை
செந்தில்குமார் செயலர், ஊரக வளர்ச்சித்துறை செயலர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
சுப்ரியா சாஹு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர், மக்கள் நல்வாழ்வுத்துறை
ககன்தீப்சிங் பேடி செயலர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர், ஊரக வளர்ச்சித்துறை
பிரதீப் யாதவ் செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர், உயர் கல்வித்துறை
செல்வராஜ் திட்ட இயக்குனர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் - 2 செயலர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
ஜான் லுாயிஸ் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் இயக்குனர், சமூக பாதுகாப்பு திட்டம்
விஜயலட்சுமி கூடுதல் செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
வெங்கடாசலம் கமிஷனர், நில சீர்திருத்தங்கள் கமிஷனர், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி
ஹரிகரன் திட்ட இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் கமிஷனர், நில சீர்திருத்தங்கள்
லில்லி சிறப்பு செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பு செயலர், போக்குவரத்து துறை
சந்தீப் சக்சேனா செயலர், நீர்வளத்துறை தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
சாய்குமார் தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்
மகேஸ்வரன் தலைவர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு உப்பு கழகம்
* தமிழ்நாடு செய்தித்துறை இயக்குனர் வைத்திநாதனிடம், கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது
* தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் திட்ட இயக்குனர் ஜவகரிடம், கூடுல் பொறுப்பாக சமூக சீர்திருத்தத்துறை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.