ADDED : ஆக 05, 2024 01:45 AM
சென்னை:டி.ஆர்.ஓ., எனப்படும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், 20 பேரை பணியிடமாற்றம் செய்து, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்த விபரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் நில எடுப்பு தனி டி.ஆர்.ஓ., நாராயணன், நீலகிரிக்கும்; கோவை மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி, சிவகங்கைக்கும் டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக மருத்துவ பணிகள் கழக டி.ஆர்.ஓ., கீதா, புதுக்கோட்டைக்கும்; வாணிப கழக கோவை டி.ஆர்.ஓ., ஜெயச்சந்திரன், தென்காசிக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவில் நிலங்கள் தொடர்பான தனி அலுவலராக இருந்த ஜானகி, சென்னைக்கும்; சென்னை சிப்காட் பொது மேலாளர் கார்த்திகேயன், திருப்பூருக்கும் டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தலைமை செயலக தனி அலுவலராக இருந்த ராமபிரதீபன், திருவண்ணாமலைக்கும்; இணை தலைமை தேர்தல் அலுவலராக இருந்த அரவிந்தன், முதல்வர் தனிப்பிரிவு தனி அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் உள்ளிட்ட, 20 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.