sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை

/

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை

1


ADDED : ஜூன் 09, 2024 01:00 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 01:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அரசு மருத்துவமனைகளில், அரசு ஊழியர்களும் இனி காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம்' என, மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில், அனைத்து தரப்பினருக்கும், புறநோயாளிகள் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம், அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம், முதல்வர் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு இருந்தால் மட்டுமே, இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி உள்ளது. இது, அரசு மருத்துவமனைகளில் ஏற்கப்படாமல் இருந்தது. அதனால், அவர்களுக்கு முதல்வர் காப்பீட்டு அட்டை வழங்கப்படாமல் இருந்தது. எனவே, அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை பெறுவதில் சிக்கல் இருந்தது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன் பெறும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 'அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், 5 லட்சம் ரூபாய் வரை, அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை பெறலாம். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை சிறப்பு சிகிச்சைகளையும் பெறலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

நிதித்துறை ஒப்புதலோடு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us