sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முடக்கப்படும் வங்கி கணக்கை மீட்பதில் சிக்கல்

/

முடக்கப்படும் வங்கி கணக்கை மீட்பதில் சிக்கல்

முடக்கப்படும் வங்கி கணக்கை மீட்பதில் சிக்கல்

முடக்கப்படும் வங்கி கணக்கை மீட்பதில் சிக்கல்


ADDED : ஏப் 01, 2024 01:21 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை மீட்க, பண மோசடி தொடர்பான ஆவணங்களை, போலீசார் விரைந்து வழங்க வேண்டும்' என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் குற்ற வாளிகள், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் பணத்தை இழப்போர், உடனடியாக வங்கிக் கணக்கை முடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு முடக்கப்படும் வங்கிக் கணக்கில் இருந்து, பாதிக்கப்பட்ட நபர்களால் தொகையை எடுக்க முடிவதில்லை. பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என, மொத்த பணமும் சிக்கிக் கொள்வதால், பாதிக்கப்படும் நபர்கள் அன்றாட செலவுக்கு கூட கடன் வாங்கக் கூடிய நிலைக்குஆளாகின்றனர்.

இதனால், வழக்குப்பதிவு உள்ளிட்ட ஆவணங்களை காலம் தாழ்த்தாது தர வேண்டும் என, மாநில சைபர் கிரைம் பிரிவில், பாதிக்கப்பட்ட நபர்கள் மனு அளித்துஉள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 'வங்கிக்கணக்கில் இருந்து, சைபர் கிரைம் குற்றவாளிகள் எடுத்த தொகையை மட்டும் முடக்கி விட்டு, மீதமுள்ள தொகையை உடனடியாக பாதிக்கப்பட்ட நபர்கள் எடுத்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

'வங்கிக்கணக்கை மீட்பதில் சிக்கல் நீடிப்பதால், பண மோசடி தொடர்பான வழக்கு விபரங்களை போலீசார் விரைந்து எங்களுக்கு தர வேண்டும். வங்கிகளுக்கும் இ - மெயில் வாயிலாக அனுப்ப வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us