sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

/

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு


ADDED : மார் 27, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 27, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடந்த 2018ல், துாத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது; 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கையின்படி, வழக்கை முடித்தது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கை லோக்சபா தேர்தலுக்கு பின் விசாரிக்க கோரினார்.

மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி, ''இச்சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை வழங்கவில்லை,'' என்றார்.

இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கைகள் விபரங்களை, மனுதாரருக்கு அறிக்கையாக வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்., 25க்கு தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us