ADDED : ஜூன் 07, 2024 10:44 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் சில நாட்களாக ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்கள் திருடுபோனது. இதுகுறித்து வடக்கு போலீ்ஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் குவிந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,ராஜகோபால்,தனிப்படை எஸ்.எஸ்.ஐ.,வீரபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து நகரில் உள்ள சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் குறிப்பிட்ட 2 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நகருக்குள் சுற்றித்திரிந்தது தெரிந்தது. போலீசார் அவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் கரூர் பாலவிடுதி குரும்பபட்டியை சேர்ந்த ஜெயபால்,கரூர் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டியை சேர்ந்த உதயநிதி என்பதும் இவர்கள் திண்டுக்கல் நகரில் 6 டூவீலர்களை திருடியதும் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 6 டூவீலர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.