sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி, சேலத்திலும் நகர்ப்புற வளர்ச்சி குழுமம்

/

திருச்சி, சேலத்திலும் நகர்ப்புற வளர்ச்சி குழுமம்

திருச்சி, சேலத்திலும் நகர்ப்புற வளர்ச்சி குழுமம்

திருச்சி, சேலத்திலும் நகர்ப்புற வளர்ச்சி குழுமம்

1


ADDED : ஜூன் 03, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 06:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், திருச்சி, சேலத்தில், புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் உள்ளது. இதேபோல, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில், திட்டமிடல் பணிக்காக, புதிய குழுமங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

நகர், ஊரமைப்பு சட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், இதற்கான பரிந்துரைகளை தெரிவித்தன. எனினும், இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போதைய தமிழக அரசு, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகரங்களுக்கு, புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இந்த குழுமங்கள் விரைவில் இயங்கத் துவங்க உள்ளன.

இதையடுத்து, 'திருச்சி, சேலத்திலும், புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும்' என, தமிழக அரசு, 2022ல் அறிவித்தது. இதற்கான அரசாணைகள் தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டது.

இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகரங்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், கூடுதல் கவனம் செலுத்தி வரும் நிலையில், திருச்சி, சேலத்தில், புதிதாக நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் அமைப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நகரங்களில், முழுமை திட்டங்கள், மண்டல திட்டங்கள் பணிகளின் நிலவரம், எந்தெந்த பகுதிகளை சேர்ப்பது என்பது குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின், இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us