sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலாவதி ஆவின் பிஸ்கெட் விற்பனை முதல்வர் தலையிட வானதி கோரிக்கை

/

காலாவதி ஆவின் பிஸ்கெட் விற்பனை முதல்வர் தலையிட வானதி கோரிக்கை

காலாவதி ஆவின் பிஸ்கெட் விற்பனை முதல்வர் தலையிட வானதி கோரிக்கை

காலாவதி ஆவின் பிஸ்கெட் விற்பனை முதல்வர் தலையிட வானதி கோரிக்கை


ADDED : மே 28, 2024 08:40 PM

Google News

ADDED : மே 28, 2024 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:காலாவதி ஆவின் பிஸ்கட் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுத்து, ஆவின் நிர்வாகத்தை முதல்வர் சீரமைக்க வேண்டும் என, கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் மற்றும் கொடிவேரி அணை ஆவின் பாலகங்களில் காலாவதியான ஆவின் பிஸ்கட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலாவதியான 6 டன் பிஸ்கெட் பாக்கெட்டுகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.

ஆவின் தயாரிப்புகள் தரமானவை என மக்கள் நம்புகின்றனர். காலாவதி பிஸ்கட் விற்பனை இந்த நம்பிக்கையை தகர்த்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசால் எந்தவொரு வணிக நிறுவனத்தையும், வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற அவப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விடும். எனவே, முதல்வர் ஸ்டாலின், ஆவின் நிர்வாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us