ADDED : ஆக 05, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:திருச்செந்துார் கோவிலில்பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று சுவாமி தரிசனம்செய்தார். அப்போது அளித்த பேட்டி:
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களை அரசு வெளியிட்டுள்ளதை கண்டிக்கிறேன். மிகவும் பின்தங்கிய வன்னியர் சமுதாயத்தை எப்படி முன்னேற்றலாம் என்ற சமூக நீதியை பற்றி முதல்வருக்கு தெரியவில்லை.
எம்.பி.சி., பிரிவில் உள்ள 115 சமுதாயங்களுக்கும் 30ஆண்டுகளில் என்ன வேலை, கல்வி கிடைத்ததுஎன்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.