sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாளை ஓட்டு எண்ணிக்கை;: ஏற்பாடுகள் தயார்

/

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாளை ஓட்டு எண்ணிக்கை;: ஏற்பாடுகள் தயார்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாளை ஓட்டு எண்ணிக்கை;: ஏற்பாடுகள் தயார்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாளை ஓட்டு எண்ணிக்கை;: ஏற்பாடுகள் தயார்


ADDED : ஜூலை 12, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை 13ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.

ஓட்டு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவ படை, சிறப்பு காவல் படை, போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், 8 சப் இன்ஸ்பெக்டர்கள்,18 போலீசார், 14 சிறப்பு காவல் படையினர், 8 மத்திய காவல் படையினர் மற்றும் போலீசார் என ஒரு நாளைக்கு 150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு 2 மேஜைகள் போடப்பட்டு ஒரு சுற்று தபால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us