sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சூர்யா படப்பிடிப்பில் விதி மீறல்; ரஷ்யர்களை அழைத்து வந்தது யார்: தோண்டித் துருவும் ஊட்டி போலீஸ்

/

சூர்யா படப்பிடிப்பில் விதி மீறல்; ரஷ்யர்களை அழைத்து வந்தது யார்: தோண்டித் துருவும் ஊட்டி போலீஸ்

சூர்யா படப்பிடிப்பில் விதி மீறல்; ரஷ்யர்களை அழைத்து வந்தது யார்: தோண்டித் துருவும் ஊட்டி போலீஸ்

சூர்யா படப்பிடிப்பில் விதி மீறல்; ரஷ்யர்களை அழைத்து வந்தது யார்: தோண்டித் துருவும் ஊட்டி போலீஸ்

9


UPDATED : ஆக 18, 2024 09:18 AM

ADDED : ஆக 18, 2024 09:12 AM

Google News

UPDATED : ஆக 18, 2024 09:18 AM ADDED : ஆக 18, 2024 09:12 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் நடிகர் சூர்யா படப்பிடிப்புக்கு, ரஷ்ய நடிகர்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்தது யார் என, போலீசார் தோண்டித் துருவி விசாரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படம் ஒன்றின் சண்டை காட்சிகள் படம் ஆக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த, 27ம் தேதி சுற்றுலா விசா பெற்று வந்துள்ளனர். அவர்கள், ஊட்டியில் உள்ள, சில தனியார் ஓட்டல்களில் தங்கி பட பிடிப்பிற்கு சென்று வந்தனர்.

தங்கும் விடுதி

சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கு, இத்தகைய அனுமதி கிடையாது. நடிகர்களை அழைத்து வரும் படக்கம்பெனிகள், என்ன காரணத்துக்காக நடிகர்களை அழைத்து வருகிறார்களோ, அதை தெளிவாக குறிப்பிட்டு அனுமதி பெற்று விடுவர். அது மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வந்து தங்கினால், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ரஷ்யா நாட்டினர் தங்கி இருந்தது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, எஸ்.பி., நிஷா உத்தரவின் பேரில், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, போலீசாரை அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்.

எச்சரித்த போலீசார்

போலீசார் கூறுகையில், 'ஊட்டி ஹில்பங்க் ஓட்டல் வெல்பேக் ரெசிடென்சி, ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் சபையர் மற்றும் சபையர் கார்டன் வியூ ஆகிய ஓட்டல்களில் தங்கிய, 155 பேரில், 42 பேர் கடந்த வாரம் ரஷ்ய திரும்பிய நிலையில், 113 பேர் அங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின், விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கி எச்சரித்தோம்.

கடும் நடவடிக்கை

பின், அங்கு தங்கி இருந்த ரஷ்ய நாட்டினர் அனைவரையும் நேற்று முன்தினம் வெளியேற்றினோம். இனி, வரும் நாட்களில் வெளிநாட்டினர் ஊட்டியில் தங்குவது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர். சுற்றுலா விசாவில் அழைத்து வரப்பட்ட ரஷ்யர்களை, விதிகளுக்கு புறம்பாக படப்பிடிப்புக்கு பயன்படுத்தியது குறித்தும் படக்கம்பெனியிடம், தோண்டித் துருவி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us