sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிக்கன் சாப்பிட்ட பின் வாந்தி; 8 வயது சிறுவன் உயிரிழப்பு

/

சிக்கன் சாப்பிட்ட பின் வாந்தி; 8 வயது சிறுவன் உயிரிழப்பு

சிக்கன் சாப்பிட்ட பின் வாந்தி; 8 வயது சிறுவன் உயிரிழப்பு

சிக்கன் சாப்பிட்ட பின் வாந்தி; 8 வயது சிறுவன் உயிரிழப்பு


ADDED : ஜூன் 23, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், பனந்தோப்பு காலனியை சேர்ந்த டிரைவர் மணி - ரம்யா தம்பதிக்கு சரண், 8, அரண், 7, என்ற இரு மகன்கள் இருந்தனர். ஆசிரியரான ரம்யா பணியாற்றும் பள்ளியில் சரண் மூன்றாம் வகுப்பும், அரண் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். கடந்த, 21ம் தேதி இரவு வீட்டில் சமைத்த பிராய்லர் சிக்கனை அனைவரும் சாப்பிட்டு உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு சரண் வாந்தி எடுத்தார். கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகனை அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் சரண் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us