sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்னாச்சு: கேட்கிறார் இ.பி.எஸ்.,

/

அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்னாச்சு: கேட்கிறார் இ.பி.எஸ்.,

அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்னாச்சு: கேட்கிறார் இ.பி.எஸ்.,

அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரகசியம் என்னாச்சு: கேட்கிறார் இ.பி.எஸ்.,

18


UPDATED : ஆக 17, 2024 03:54 PM

ADDED : ஆக 17, 2024 11:51 AM

Google News

UPDATED : ஆக 17, 2024 03:54 PM ADDED : ஆக 17, 2024 11:51 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமைச்சர் உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் ரத்து என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்தும் திமுக முதல்வர், தன்னுடைய ஒன்றுக்கும் உதவாத வெற்று விளம்பரப் பேச்சுகளை நம்பி ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் ரத்தக் கறைகள் தனது கைகளில் இருப்பதை உணர வேண்டும்.

நீட் ரத்து ரகசியம்

40 எம்பிக்களை வைத்து பார்லிமென்டில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? அமைச்சர் உதயநிதி சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்? இன்னும் எத்தனை மாணவச் செல்வங்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும்? நீட் ரத்து விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். இனியாவது நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.

சாதனைக் கற்கள்

மாணவச் செல்வங்களே, உயிர் என்பது இன்றியமையாத ஒன்று. அதனை இழக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் உங்கள் மனதில் வரக்கூடாது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும் அதனை நேரே எதிர்கொண்டு சாதனைக் கற்களாக மாற்றப் பாருங்கள். இந்த உலகத்தில் உங்களுக்கென்ற ஒரு அற்புதமான இடம் எப்போதும் இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us