ADDED : ஜூன் 30, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர்:
மினி பஸ்கள், கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. அரசு பஸ் வசதி இல்லாத பகுதிகளில் இயக்கப்பட்டன. கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
கடந்த ஆட்சியில் புறக்கணித்து விட்டனர்.மீண்டும் மினி பஸ்களை சிறப்பாக இயக்க, வரைவு கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, அடுத்த மாதம் உள்துறை செயலர் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அது முடிந்த பின், மினி பஸ்களுக்கான வழித்தடங்கள் வெளியிடப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

