sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீனவர் பிரச்னைக்கு காரணம் யார்; தமிழக கவர்னர் குற்றச்சாட்டு!

/

மீனவர் பிரச்னைக்கு காரணம் யார்; தமிழக கவர்னர் குற்றச்சாட்டு!

மீனவர் பிரச்னைக்கு காரணம் யார்; தமிழக கவர்னர் குற்றச்சாட்டு!

மீனவர் பிரச்னைக்கு காரணம் யார்; தமிழக கவர்னர் குற்றச்சாட்டு!

19


UPDATED : மார் 02, 2025 01:28 PM

ADDED : மார் 02, 2025 01:26 PM

Google News

UPDATED : மார் 02, 2025 01:28 PM ADDED : மார் 02, 2025 01:26 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, 1974ம் ஆண்டு நடந்த தவறும், அதற்கு அப்போதைய மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த இன்றைய ஆளும் கட்சியும் தான் காரணம் என்று என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., குற்றம் சாட்டி உள்ளார்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் சென்ற தமிழக கவர்னர் ரவி, இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் குடும்பத்தினரை சந்தித்து கோரிக்கைளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974ம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழகத்திலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 1974ம் ஆண்டு நடந்த தவறும், அதற்கு அப்போதைய மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த இன்றைய ஆளும் கட்சியும் தான் காரணம். இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us