sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?

/

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மத்திய அரசு குறைத்தது ஏன்?

13


ADDED : ஏப் 28, 2024 05:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:34 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையை விட, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு, தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத கார்டுதாரர்களுக்கும், ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கும், ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. லிட்டர் மண்ணெண்ணெய் விலை, 15 ரூபாய் - 16.50 ரூபாய்.

தலா 2 - 3 லிட்டர்


தமிழக கார்டுதாரர்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அதன்படி, 2021 ஏப்ரலில் மாதந்தோறும், 75.36 லட்சம் லிட்டர் ஒதுக்கப்பட்டது.

இது, 2022 ஏப்ரல் முதல் மாதம், 45.20 லட்சம் லிட்டராகவும்; 2023 ஏப்ரல் முதல் மாதம், 27.12 லட்சம் லிட்டராகவும் குறைக்கப்பட்டது.

இதனால், கார்டுதாரர்களுக்கு தலா, 2 - 3 லிட்டர் வரை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் ஒரு லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டிற்காக இம்மாதம் முதல் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, 10.84 லட்சம் லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, தமிழகத்தில் சமையல் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

குறை கூறக்கூடாது


இதுகுறித்து, மத்திய பொது வினியோக திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது, 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதே சமயம், காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.40 கோடி. மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாயிலாக காஸ் இணைப்பு இல்லாத ஏழை பயனாளிகளை கண்டறிந்து, புதிய காஸ் இணைப்பு வழங்குகிறது.

இதனால்தான், தமிழகத்திற்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது குறை கூறுவது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

'ஒரு லிட்டர் கூட தர முடியாது'

தமிழக உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் காஸ் சிலிண்டர் இணைப்புகள் அதிகம் இருப்பதால், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் காரணம் ஏற்புடையது தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், 4 - 5 காஸ் இணைப்புகளை பெற்றிருப்பதால், மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.ஆனால், தமிழகத்தில் தற்போது, 30 லட்சம் பேர் காஸ் இணைப்பு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தலா ஒருவருக்கு, 2 லிட்டர் என்றாலும், 60 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வேண்டும். கடந்த ஆண்டில், 27 லட்சம் லிட்டர் வழங்கிய நிலையில், தலா ஒரு லிட்டர் வழங்கப்பட்டது. அதைவிட இந்தாண்டு ஒதுக்கீடு குறைந்துள்ளது. இதனால் ஒரு குடும்பத்திற்கு, ஒரு லிட்டர் கூட தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us