sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேகதாது விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்?: ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

/

மேகதாது விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்?: ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

மேகதாது விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்?: ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

மேகதாது விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்?: ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

13


UPDATED : ஏப் 20, 2024 05:42 PM

ADDED : ஏப் 20, 2024 05:23 PM

Google News

UPDATED : ஏப் 20, 2024 05:42 PM ADDED : ஏப் 20, 2024 05:23 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அன்புமணி கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேதாது அணை கட்டியே தீருவோம். அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன் வராமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழகத்தில் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம்


தமிழகம் அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது. அதை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம்.

கண்டிக்க வேண்டும்


இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தெரிவித்த ராமதாஸ்


இது குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த தமிழக மக்களுக்கு நன்றி. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us