sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்திரப்பதிவு 'டோக்கன்' நிறுத்தம் ஏன்?

/

பத்திரப்பதிவு 'டோக்கன்' நிறுத்தம் ஏன்?

பத்திரப்பதிவு 'டோக்கன்' நிறுத்தம் ஏன்?

பத்திரப்பதிவு 'டோக்கன்' நிறுத்தம் ஏன்?

1


ADDED : செப் 04, 2024 12:23 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'ஆன்லைன்' முறையில், 'டோக்கன்' பெறும் வசதி இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 582 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' வாயிலாக, பத்திர விபரங்கள் முன்கூட்டியே சரி பார்க்கப்படும்.

பத்திரம், அதை எழுதி கொடுப்பவர், பெறுபவர் குறித்த அடையாள ஆவணங்களும் சரி பார்க்கப்பட்ட பின், பத்திர பதிவுக்கான நேரம் ஒதுக்கி, 'ஆன்லைன்' முறையில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன் வரிசை அடிப்படையில் தான் ஒவ்வொரு பத்திரமும் பதிவு செய்யப்படும்.

இந்நிலையில், செப்., 2 முதல் ஆன்லைன் முறையில் புதிதாக டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேர் மற்றும் இணையதளத்தில் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்து வருகிறோம். இந்த பணிகளை முடிக்க, நான்கு நாட்கள் வரையாகும் என, தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதனால், டோக்கன் வழங்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்காலிகமானது தான். விரைவில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us