sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடிகார கணவனை கொன்ற மனைவி போலீசில் சரண்

/

குடிகார கணவனை கொன்ற மனைவி போலீசில் சரண்

குடிகார கணவனை கொன்ற மனைவி போலீசில் சரண்

குடிகார கணவனை கொன்ற மனைவி போலீசில் சரண்


ADDED : ஜூன் 04, 2024 01:28 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் வில்லியம் வேளாங்கண்ணி, 30. கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி அற்புதமேரி, 27. ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். வில்லியம் வேளாங்கண்ணி, அடிக்கடி குடித்துவிட்டு, போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல நேற்று முன்தினம், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், அற்புதமேரி தாய் வீட்டுக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போதும், கணவன் குடிபோதையில் படுத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த அற்புதமேரி, அருகில் இருந்த அம்மிக்கல்லை துாக்கி, கணவன் தலையில் போட்டுக் கொன்றார்.

போலீசில் சரணடைந்த அவரை வையம்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us