sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கஞ்சா விற்க வந்த போலீஸ் மடக்கி பிடித்த பெண் இன்ஸ்.,

/

கஞ்சா விற்க வந்த போலீஸ் மடக்கி பிடித்த பெண் இன்ஸ்.,

கஞ்சா விற்க வந்த போலீஸ் மடக்கி பிடித்த பெண் இன்ஸ்.,

கஞ்சா விற்க வந்த போலீஸ் மடக்கி பிடித்த பெண் இன்ஸ்.,


ADDED : ஜூன் 25, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 29. இவர் கடந்த, 2020-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர், தற்போது நீலகிரி மாவட்டம், பில்லுார் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஊட்டி பஸ்டாண்டில் சுற்றித்திரிந்தபோது, இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீசார், அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக, 200 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது.

விசாரணையில்,'சவுந்தர்ராஜன், நீலகிரிக்கு பணிக்கு வந்த பின், கடந்த, நான்கு மாதங்களாக தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்' என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஊட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us