sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யோகா விளையாட்டு அல்ல!: சத்குரு கருத்து

/

யோகா விளையாட்டு அல்ல!: சத்குரு கருத்து

யோகா விளையாட்டு அல்ல!: சத்குரு கருத்து

யோகா விளையாட்டு அல்ல!: சத்குரு கருத்து

9


ADDED : செப் 13, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 13, 2024 03:49 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'யோகா ஒருவருடன் மற்றொருவர் போட்டி போட்டு செய்யக்கூடிய விளையாட்டாக இருக்க முடியாது. மனிதர்களை எல்லையற்ற உணர் திறன், வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி' என, சத்குரு தெரிவித்துள்ளார்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44வது பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் 2026ல் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் யோகாவும் இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:


போட்டி விளையாட்டுகளின் அரங்காக இருக்கும் ஒரு இடத்திற்குள், 'யோகா' நுழைவது வேதனை, ஏமாற்றத்தை அளிக்கிறது. யோகா ஒரு போட்டியாக இருக்க முடியாது.

யோகா என்பது, மனிதர்களை வரையறுக்கப்பட்ட சாத்தியங்களில் இருந்து, எல்லையற்ற உணர்வுத் திறன், வாழ்க்கை அனுபவத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி மற்றும் சுய பரிணாம வளர்ச்சிக்கான தொழில் நுட்பமாகும். இதை வேறு யாருடனும் போட்டியாக செய்யக்கூடாது.

இதன் மூலம் சக்தி வாய்ந்த யோக அறிவியலை, மற்றொருவரை விட சிறப்பாக செய்ய முயற்சிக்கும் சர்க்கஸ் போன்ற செயல்முறையாக நாம் குறைத்து விடுவோம்.

யோகாவின் அடிப்படை விழிப்புணர்வை பற்றியது, ஒப்பீடு செய்வதையும், போட்டி போடுவதையும் பற்றியது அல்ல. யோக அறிவியலின் பிறப்பிடமாக விளங்குகிறது. இது ஒரு அபத்தமான விளையாட்டாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விவேகம் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us