sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது

/

சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது

சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது

சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க பிளான்: 10 பேர் கைது

10


ADDED : பிப் 25, 2025 11:25 AM

Google News

ADDED : பிப் 25, 2025 11:25 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம், ஈ.வெ.ரா., பற்றி கூறி வரும் கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறின. அவரது பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் சீமானுக்கும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து முரண் எழுந்ததாக தெரிகிறது. மேலும் தமிழ்த் தேசியத்தில் இருந்து அவர் வழுவிச் செல்வதாகவும் கட்சினர் குற்றம்சாட்டி வந்தனர். கட்சியில் இருந்து மாநில, மாவட்ட பொறுப்புகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகி கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில், சீமான் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர்கள், பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு செல்ல முயன்றபோது போலீசிடம் சிக்கினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைது செய்துள்னர். அவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us