sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

/

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்


ADDED : பிப் 24, 2024 09:04 AM

Google News

ADDED : பிப் 24, 2024 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் வீசி விட்டு தப்பினர். அந்த தங்கக்கட்டிகளை இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலுக்குள் தேடி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான பைபர் கிளாஸ் படகு ஒன்று மண்டபம் வேதாளை கடற்கரை நோக்கி வந்தது. அப்போது இந்திய கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பலில் இருந்த வீரர்கள் படகை மடக்கினர். படகில் இருந்த ஒரு கடத்தல்காரர் தங்க கட்டிகளை கடலில் வீசி விட்டு கடலில் குதித்து நீந்தி தப்பினார். மேலும் படகில் இருந்த இரண்டு கடத்தல்காரர்களை இந்திய வீரர்கள் கைது செய்தனர்.

கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சி பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோர காவல் படையினர், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர். அதன் மதிப்பு ரூ.6.25 கோடியிருக்கும் என புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us