sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொங்கலுக்கு ஊருக்கு செல்ல 1.25 லட்சம் பேர் முன்பதிவு

/

பொங்கலுக்கு ஊருக்கு செல்ல 1.25 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கலுக்கு ஊருக்கு செல்ல 1.25 லட்சம் பேர் முன்பதிவு

பொங்கலுக்கு ஊருக்கு செல்ல 1.25 லட்சம் பேர் முன்பதிவு


ADDED : ஜன 11, 2024 10:34 PM

Google News

ADDED : ஜன 11, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இன்று முதல், 14ம் தேதி வரை, தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்கள் மற்றும் 4,706 சிறப்பு பஸ்கள் உட்பட, 11,006 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு, 8,478 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து, ஏற்கனவே அறிவித்தப்படி பஸ்கள் இயக்கப்படும்.

அரசு விரைவு பஸ்களில் பயணிக்க, இதுவரை 1.25 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும், 85,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us