திருச்செந்துார் கந்த சஷ்டி விழா 13.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்துார் கந்த சஷ்டி விழா 13.50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : நவ 10, 2024 02:46 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 2ம் தேதி துவங்கி 8ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறிப்பட்டுள்ள விபரம் வருமாறு:
கந்தசஷ்டி விழாவின் போது, முதல் 6 நாட்கள் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 7 லட்சத்து 50,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 7 நாட்களில் 13 லட்சத்து 50,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சூரசம்ஹார நிகழ்ச்சி நாளில் கூட்டத்தில் சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு செல்போன்கள் திருட்டு போய் உள்ளது. மேலும், மூன்று டூ - வீலர்களும், 15 சவரன் தங்க நகைகளும் திருடு போய் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள்புகாரின்படி, திருச்செந்துார் கோவில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.