sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்

/

சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்

சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்

சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்

82


ADDED : செப் 18, 2024 04:21 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:21 AM

82


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை: தி.மு.க., முப்பெரும் விழா, நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நம் பகை இன்னும் விட்டுவிடவில்லை. அன்று ராஜாஜி, ஹிந்தியை திணித்தார். தற்போது மீண்டும் இரு மொழிக் கொள்கையை எடுத்து விடுங்கள் என்கின்றனர்.

அதே போராட்டத்தை மீண்டும் எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். அதே ஜாதிதான், மறைமுகமாக பல காரியங்களை செய்கிறது. சமீபத்தில் டில்லி அரசு, இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக, ஒரு கமிட்டி அமைத்துள்ளது.

தற்போதுள்ள சரித்திரத்தில் என்ன கேடு? ஹரப்பா மொஹஞ்சதாரோ திராவிட நாகரிகம் என்றோம்; அது ஆரியர்கள் நாகரிகம் என, கமிட்டி கூறுகிறது. அதாவது, சரஸ்வதி நாகரிகம் என்கிறது. கமிட்டியில் 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் அரசு அதிகாரிகள்; மீதி 14 பேரும் பிராமணர்கள். எனவே, மறுபடியும் பழைய பல்லவியை பாட வேண்டிய நிலை. இதே நிலை தொடர்ந்தால், தி.மு.க., தன் வீரியத்தைக் காட்டும் நிலை வரும். இவ்வாறு அவர் பேசினார்.

'துணை முதல்வராக்க ஏன் தயக்கம்?'

ஸ்டாலின் விருது பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசியதாவது: யாரை முன்னிலைப்படுத்தினால், பொதுமக்களைக் கவர முடியுமோ, தொண்டர்களை கட்சி வேலை செய்ய வைக்க முடியுமோ, அவர்களை முன்னிறுத்த வேண்டும். உங்களுக்கு இன்னும் என்ன தயக்கம்? உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா?அன்பழகன் உங்களை துணை முதல்வராக ஏற்றுக் கொண்டார். அவரை விட பெரியவர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us