ADDED : பிப் 23, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், 'வெற்றி லைப்கேர் பவுண்டேஷன்' என்ற போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டது. இங்கு தங்கி சிகிச்சை பெற்ற மணிகண்டன், 36, என்பவர் பலியானார்.
சுகாதார துறையினர் விசாரணை செய்து, உரிமம் பெறாமல் மறுவாழ்வு மையத்தை நடத்திய திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்து, மையத்துக்கு, 'சீல்' வைத்தனர்.
மேலும், மையத்தில் இருந்து மீட்கப்பட்ட, 32 பேர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 15 பேர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதில் பெரும்பாலானோர், அவரவர் வீடுகளுக்கே திரும்ப சென்றுள்ளனர்.