sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்

12


ADDED : செப் 29, 2024 08:06 AM

Google News

ADDED : செப் 29, 2024 08:06 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இன்று(செப்., 29) இலங்கை கடற்படை கைது செய்தது.

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் 2 படகுகளில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவ குடும்ப மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்கு மீன் பிடிக்கப் போகும் மீனவர் பிரச்னைக்கு, அடுத்த மாதம் கொழும்பில் நடக்கும் கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்வு காண வேண்டும். இலங்கை புதிய அதிபரிடமும் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குரல் கொடுத்த மறுநாளே 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us