இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை
ADDED : பிப் 22, 2024 11:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கடந்த பிப்.,8ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவர்கள் இன்று(பிப்.,22) இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது 19 மீனவர்களில் 18 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.