sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள் 

/

தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள் 

தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள் 

தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள் 

7


ADDED : அக் 22, 2024 04:15 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:15 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, ஏ.சி., இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. நடப்பாண்டு இறுதிக்குள் நாடு முழுதும், 26 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. திருநெல்வேலி - ஷாலிமர், தாம்பரம் - சந்திரகாசி என இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்க உள்ளன.

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் ரயிலால், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கும் இந்த ரயில் சேவை கிடைக்க பெறும். சென்னையில் இருந்து வடமாநிலங்கள் பயணிப்போருக்கு சந்திரகாசி ரயில் பயனுள்ளதாக இருக்கும்.

என்னென்ன வசதி?


அம்ரித் பாரத் ரயில்கள், 12 முன்பதிவு, எட்டு முன்பதிவில்லா பொது பெட்டி, மாற்றுத்திறனாளிகள் பெட்டி உட்பட, 22 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, விசாலமான இருக்கை வசதி, அடுத்து வரும் ரயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

'ஜீரோ டிஸ்சார்ஜ்' மாடுலர் கழிப்பறை, அதிநவீன வசதி கொண்ட இணைப்பு மற்றும் ரயில் பெட்டிகள் என்பதால், ரயில் இயக்கம் மென்மையாக உணரப்படும். 'புஷ்-புல்' தொழில்நுட்பம் என்பதால், இருபுற இன்ஜின்கள் மூலம் ரயில், 130 கி.மீ., வேகத்தில் இயங்கும்.






      Dinamalar
      Follow us