ADDED : ஆக 14, 2011 02:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூரில் மினிபஸ்மோதி சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கோவை மாவட்டம் அன்னூரிலிருந்து முன்டிபாளையம் நோக்கி சென்ற மினி பஸ் காசபாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த விசானம்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன்(40) மற்றும் பழநிசாமி(22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.