sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை

/

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை

5


ADDED : ஏப் 16, 2024 01:13 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 01:13 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரசாரம் நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரசாரம் பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்களிடம் ஓட்டு சேகரிக்கும் வகையில், அவர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம், தேர்தல் பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளது.

இதன் மூலம் குறிப்பிட்ட தகவல்கள் அதிகப்படியான நபர்களுக்கு சென்று சேர்வதுடன், செலவுகளும் குறைவு; இந்த வகை பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே அந்தந்த கட்சிகள் தங்களின் தொழில்நுட்ப அணியின் உதவியுடன் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையே நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதன்பிறகு கட்சிகள் பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 6 மணி வரை மட்டுமே ஓட்டு சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மேல் பிரசாரத்தை பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1284 கோடி பறிமுதல்


அதேபோல், நாளை 6 மணிக்கு பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியான அறிக்கையில், 'தமிழகத்தில் இதுவரை ரூ.1284 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரொக்கம் ரூ.162.47 கோடி (வருமான வரித்துறையால் ரூ.83.63 கோடியும், பறக்கும் படையால் ரூ.78.84 கோடி) பறிமுதல் செய்யப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us