sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு 20 சவரன், ரூ.5 லட்சம் கொள்ளை

/

மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு 20 சவரன், ரூ.5 லட்சம் கொள்ளை

மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு 20 சவரன், ரூ.5 லட்சம் கொள்ளை

மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு 20 சவரன், ரூ.5 லட்சம் கொள்ளை


ADDED : மார் 20, 2025 01:04 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி:சூளகிரி அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டிக்கொலை செய்து, வீட்டை தீ வைத்து எரிந்த மர்ம கும்பல், வீட்டிலிருந்த, 20 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரப்பா. விவசாயி. இவர், நாகம்மா, 65, என்பவரது மகள்களான ராணி, தெய்வானை ஆகிய இருவரை திருமணம் செய்துள்ளார். மருமகன் வீட்டில் நாகம்மா வசித்து வந்தார்.

நேற்று காலை அனைவரும் வீட்டிலிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று விட்டனர்.

மதியம், 2:00 மணிக்கு, நாகம்மா மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இருப்பினும் வீட்டின் ஹால் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதில், வீட்டிலிருந்து நாகம்மா தீக்காயமடைந்து பலியானார். அவரது உடலில் வெட்டு மற்றும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

ஓசூர் அருகே, ஒன்னல்வாடியில் கடந்த, 12ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த லுார்துசாமி, 70, அவரின் மனைவியின் தங்கை எலிசபெத், 60, ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்டு, வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அதேபோல இச்சம்பவத்தையும் செய்த மர்ம கும்பல், வீட்டு பீரோவிலிருந்த, 20 சவரன் நகை, 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியது.

மர்ம கும்பல் வைத்த தீயில், வீட்டிலிருந்த, 30 மூட்டை ராகி மற்றும் நெல் எரிந்து நாசமாகியது.

ஏற்கனவே ஒன்னல்வாடி முதியவர்கள் கொலையில் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. அதேபோல், மூதாட்டி நாகம்மா கொலையிலும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அட்டகுறுக்கி பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us