ADDED : செப் 28, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
அக். 11ல் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளதால் வெளியூர் செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 கி.மீ., துாரத்துக்கு மேல் செல்லும் பயணியர் www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயணியரின் தேவைக்கு ஏற்ப 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். அதுபோல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களோடு 600க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களையும் இயக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.