ADDED : அக் 07, 2024 06:43 AM
கோவை : தமிழகத்தில், 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கோவை, நீலகிரி உட்பட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்., மாதத்தில், காஞ்சிபுரம் 0.20 மீ., திருவண்ணாமலை 2.05, வேலுார் 0.36, தர்மபுரி 0.19, கடலுார் 0.67, விழுப்புரம் 1.52, திருவாரூர் 0.40, நாகை 0.18 மீ., நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருச்சி 0.58, கரூர் 0.39, பெரம்பலுார் 1.67, புதுக்கோட்டை 0.39, அரியலுார் 0.22, சேலம் 1.12, நாமக்கல் 0.98, ஈரோடு 0.47, திருப்பூர் 0.53 மீ., உயர்ந்துள்ளது.சிவகங்கை 0.63, விருதுநகர் 0.09, கள்ளக்குறிச்சி 0.75, செங்கல்பட்டு 0.20, ராணிபேட்டை 0.11, திருப்பத்துார் 0.62, மயிலாடுதுறை 0.06 மீ., நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் 0.09 மீ., கிருஷ்ணகிரி 0.93, தஞ்சாவூர் 1.04, கோவை 0.56, நீலகிரி 0.23, திண்டுக்கல் 0.34, மதுரை 0.10, ராமநாதபுரம் 0.15, தேனி 0.14, துாத்துக்குடி 0.19, திருநெல்வேலி 0.20, கன்னியாகுமரி 0.43, தென்காசி 0.22 மீ., நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.