sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் நடப்பாண்டில் மே வரை 28,675 விபத்துகள்; 7,128 பேர் பலி

/

தமிழகத்தில் நடப்பாண்டில் மே வரை 28,675 விபத்துகள்; 7,128 பேர் பலி

தமிழகத்தில் நடப்பாண்டில் மே வரை 28,675 விபத்துகள்; 7,128 பேர் பலி

தமிழகத்தில் நடப்பாண்டில் மே வரை 28,675 விபத்துகள்; 7,128 பேர் பலி


ADDED : ஜூலை 26, 2025 06:32 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 06:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:'தமிழகத்தில் இந்தாண்டு வரை நடந்த, 28,675 சாலை விபத்துகளில், 7,128 பேர் பலியாகி உள்ளனர். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் விபத்து மற்றும் உயிரிழப்பு, 12.7 சதவீதம் வரை குறைந்துள்ளது' என, அரசு போக்கு வரத்து கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, மாநில அளவில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் அதிக விபத்துகள் நடக்கும் முக்கிய சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அப்பகுதிகளில் சாலை விதிகள் சார்ந்த விழிப் புணர்வு வாசகங்கள், போர்டு கள், இரவில் மிளிரும் வேகத்தடைகள் அமைத்து வருகின்றனர். தமிழக அளவில் சாலை விபத்துகள் குறித்த ஆய்வும் நடத்தப்பட்டது.

அதில், 2024 ஜன., முதல் மே வரை மாநில அளவில், தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் நடந்த, 28,454 சாலை விபத்துகளில் 8,106 பேர் பலியாகினர்.

அதே நேரம், 2025 ஜன., முதல் மே வரை நடத்திய ஆய்வில், 28,675 விபத்துக்களில், 7,128 பலியாகினர். 2024ஐ விட, 2025ல் சாலை விபத்துகள் அதிக ரித்திருந்தாலும், உயிரிழப்பு கள் குறைந்துள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டில் சாலை விபத்து, 0.78 அதிகரித்தாலும், பலி எண்ணிக்கை 12.07 சதவீதம் குறைந்துள்ளது போக்குவரத்து கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மிக அதிகம் மற்றும் அதிக விபத்து நடக்கும் ரோடுகளை அடையாளம் கண்டு, அங்கு தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஆலோசனை வழங்கியுள்ளது' என்றார்.

சென்னையில் அதிகம்


இந்தாண்டு ஜன., முதல் மே வரை மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில், 1,671 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 197 பேர் பலியாகியுள்ளனர். சென்னைக்கு அடுத்து கடலுாரில், 1,365 விபத்துகளில் 224 பேர், விழுப்புரத்தில் 1,264 விபத்துகளில் 222 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்திலேயே நீலகிரியில் மிக குறைந்த எண்ணிக்கையில் 110 விபத்துக்களில் 21 பேர் பலியாகியுள்ளனர்.








      Dinamalar
      Follow us