ADDED : செப் 01, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்,55: பெட்ரோல் பங்க் மேலாளர்.
கடந்த 27 ம்தேதி இரவு 11:00 மணியளவில் பெட்ரோல் போட வந்த மூன்று பேர் சில்லறை இல்லாததால் தகராறு செய்து செல்வகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் செல்வகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, தனுஷ்,21; விவேக்,19; பிரபாகரன்,21; ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.