ADDED : டிச 22, 2024 05:52 AM

சென்னை: மகா கும்பமேளாவை முன்னிட்டு, சென்னை - லக்னோ உட்பட மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
கன்னியாகுமரியில் இருந்து, வரும் ஜனவரி 6, 20ம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 4வது நாள் அதிகாலை 1:30 மணிக்கு, பீஹார் மாநிலம், கயா செல்லும்.
மறுமார்க்கமாக, கயாவில் இருந்து, ஜன., 9, 23ம் தேதிகளில் இரவு 11:55க்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:50 மணிக்கு கன்னியாகுமரி வரும்
கன்னியாகுமரியில் இருந்து, பிப்., 17ம் தேதி இரவு 8:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 9:50 மணிக்கு உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் செல்லும். மறுமார்க்கமாக பனாரஸில் இருந்து, பிப்., 20ம் தேதி மாலை 6:05க்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் இரவு 9:00 மணிக்கு கன்னியாகுமரி வரும்.
இது, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜன., 8, 15, 22, பிப்., 5, 19, 26ம் தேதிகளில் மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள மோமதி நகருக்கு, அடுத்த மூன்றாவது நாள் மதியம் 2:15க்கு செல்லும்.
மறுமார்க்கமாக, மோமதி நகரில் இருந்து, ஜன., 11, 18, 25, பிப்., 8, 22, மார்ச் 1ம் தேதிகளில் அதிகாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:55க்கு சென்னை சென்ட்ரல் வரும்.
இன்று காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.