ADDED : ஜன 29, 2024 12:03 AM
ராமநாதபுரம் : கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா பிப்.,23, 24ல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி கூறியதாவது:
கச்சத்தீவு திருவிழா கொண்டாட மத்திய அரசு இலங்கைக்கு, 3 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்குகிறது. தமிழக அரசு அங்கு செல்ல நாட்டு படகுகளுக்கு தலா, 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும்.
கச்சத்தீவு சம்பந்தமாக 2018ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு படி, நாட்டுப்படகுகள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும்.
இது தொடர்பாக, பயணக்குழு சார்பில் ஜன.,31ல் கலெக்டரை சந்தித்து நாட்டுப்படகு விபரங்களை வழங்கி உரிமை கோர உள்ளோம். பிப்.,5க்குள் அங்கு செல்லும் பயணியர் விபரத்தை எங்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். மொத்தம், 20 நாட்டுப்படகுகளில் 300 பேர் பயணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.