sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி

/

"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி

"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி

"கானா'வுக்கு ஒரு வழக்கில் ஜாமின்: இன்னொரு வழக்கில் மனு தள்ளுபடி


ADDED : செப் 27, 2011 12:57 AM

Google News

ADDED : செப் 27, 2011 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமி பாண்டியனுக்கு, ஒரு வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், இன்னொரு வழக்கில் கிடைக்காததால் சிறையிலேயே தொடர்ந்து இருக்கிறார்.



நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது, இரண்டு நிலமோசடி வழக்குகள், தனியார் 'டிவி' நிருபரை மிரட்டிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'டிவி' நிருபரை மிரட்டிய வழக்கில், ஏற்கனவே ஜாமின் கிடைத்து விட்டது. கொம்பையா என்பவர் கொடுத்த நிலமோசடி புகாரில், ஜாமின் கேட்ட மனு, நேற்று செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தினமும், சென்னை மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடும்படி நிபந்தனை விதித்து, நீதிபதி விஜயராகவன் ஜாமின் வழங்கினார். இருப்பினும், அசோக் பாண்டியன் என்பவர் கொடுத்த நிலமோசடி வழக்கில், இன்னமும் ஜாமின் கிடைக்காததால், அவர் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலேயே இருக்கிறார்.








      Dinamalar
      Follow us