sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம்"- அண்ணாமலை காட்டம்

/

"நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம்"- அண்ணாமலை காட்டம்

"நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம்"- அண்ணாமலை காட்டம்

"நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம்"- அண்ணாமலை காட்டம்


ADDED : மார் 05, 2024 05:02 PM

Google News

ADDED : மார் 05, 2024 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாட்டை பிளவுபடுத்த தி.மு.க., விரும்புகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க எம்.பி., ஆ.ராசா, ''தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது... ஜாக்கிரதை.. என்ன விளையாடுறீங்களா.. நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழகம் தனியாக போய்விடும்'' என பேசியிருந்தார். இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிளவுபடுத்த தி.மு.க., விருப்பம்

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: பிரிவினைவாத எண்ணங்களை மக்களின் மனதில் விதைப்பது தி.மு.க அரசியலின் அடித்தளமாக உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என இண்டியா கூட்டணியை சேர்ந்த தி.மு.க.,எம்.பி விரும்புகிறார். 1963ல் புதைக்கப்பட்ட தி.மு.க.,வின் பிரசாரம் ஒருபோதும் தலைதூக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இண்டியா கூட்டணியை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் நமது நாட்டை உடைக்க வெளிநாட்டு முகவர்களின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us