sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

''ஆறில் ரெண்டு கொடுங்க'': திமுக.,விடம் கேட்கும் மதிமுக

/

''ஆறில் ரெண்டு கொடுங்க'': திமுக.,விடம் கேட்கும் மதிமுக

''ஆறில் ரெண்டு கொடுங்க'': திமுக.,விடம் கேட்கும் மதிமுக

''ஆறில் ரெண்டு கொடுங்க'': திமுக.,விடம் கேட்கும் மதிமுக

21


ADDED : ஜன 30, 2024 12:23 PM

Google News

ADDED : ஜன 30, 2024 12:23 PM

21


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்துள்ள மதிமுக, அதில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக.,விடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க திமுக.,வில் டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதல்கட்டமாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இன்று மதிமுக உடன் பேச்சு நடத்தியது.

கடந்த முறை ஈரோடு தொகுதியில் மட்டும் போட்டியிட்ட மதிமுக, இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதற்காக விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக.,விடம் வழங்கிய மதிமுக, அதில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us