''ஆறில் ரெண்டு கொடுங்க'': திமுக.,விடம் கேட்கும் மதிமுக
''ஆறில் ரெண்டு கொடுங்க'': திமுக.,விடம் கேட்கும் மதிமுக
ADDED : ஜன 30, 2024 12:23 PM

சென்னை: திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்துள்ள மதிமுக, அதில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக.,விடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க திமுக.,வில் டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதல்கட்டமாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இன்று மதிமுக உடன் பேச்சு நடத்தியது.
கடந்த முறை ஈரோடு தொகுதியில் மட்டும் போட்டியிட்ட மதிமுக, இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதற்காக விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக.,விடம் வழங்கிய மதிமுக, அதில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.