sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டம்; 400 தோட்டக்கலை துறை ஊழியர்கள் கைது

/

 ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டம்; 400 தோட்டக்கலை துறை ஊழியர்கள் கைது

 ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டம்; 400 தோட்டக்கலை துறை ஊழியர்கள் கைது

 ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டம்; 400 தோட்டக்கலை துறை ஊழியர்கள் கைது


UPDATED : மார் 12, 2026 05:51 AM

ADDED : மார் 12, 2026 05:19 AM

Google News

UPDATED : மார் 12, 2026 05:51 AM ADDED : மார் 12, 2026 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரி மாவட்ட தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி தாவரவியல் பூங்கா முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் பூங்கா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்; 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்; தினக்கூலி பணியாளர்களுக்கு கலெக்டர் தீர்மானித்த ஊதியம் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி தாவரவியல் பூங்கா முன், 400 ஊழியர்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பூங்காக்களில், கோடை சீசன் பணிகள் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அனைவரையும் போலீசார் கைது செய்து, என்.சி.எம்.எஸ்., அரங்கிற்கு கொண்டு சென்றனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் மோகன் கூறுகையில்,''கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டம் தொடரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us